அறக்கட்டளை சொத்தை தாரைவார்ப்பதா? - ராமதாஸ்

by Staff / 13-07-2023 02:00:10pm
அறக்கட்டளை சொத்தை தாரைவார்ப்பதா? - ராமதாஸ் பாமக நிறுவனர் ராமதாஸ் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தில், ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலங்கள் அறக்கட்டளையின் நோக்கத்துக்கு எதிராக நடைபெறுவது காலம் காலமாகவே நடைபெற்று வருகிறது. 'சென்னைக்கு கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கு 125 ஏக்கர்நிலம் குத்தகைக்கு பெறப்பட்டது உள்ளிட்டவற்றை ஏற்க முடியாது. கிழக்குக் கடற்கரைச் சாலையிலும், அதையொட்டிய பகுதிகளிலும் அரசுக்கு சொந்தமாக ஏராளமான நிலங்கள் உள்ளன. ஆளவந்தார் அவரது உழைப்பால் ஈட்டிய சொத்துகளை திரைப்பட நகரம், சூரிய ஒளி மின்திட்டம் என்ற பெயரில் தாரை வார்ப்பதை அனுமதிக்க முடியாது' என கூறியுள்ளார்.
 

Tags :

Share via