திருமண மண்டபங்களில் மதுபானத்துக்கு அனுமதி
திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்களில் மதுபானங்களை பயன்படுத்த அனுமதி வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அந்தந்த மாவட்ட ஆட்சியரின் அனுமதியோடு, மதுவிலக்குத்துறை சிறப்பு அனுமதி வழங்கலாம் என புதிய சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும், கட்டண விவரங்களோடு அரசிதழை வெளியிட்டு உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி அறிவிப்பு விடுத்துள்ளார். டாஸ்மாக் அரசு அனுமதி பெற்ற பார்களிலும், நட்சத்திர விடுதிகளிலும் மட்டுமே மது அருந்த அனுமதி உள்ள நிலையில், தற்போது, திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்களில் மதுபானங்களை பயன்படுத்த அனுமதிக்கப்படவுள்ளது.
Tags :