நடிகர் விஜயகாந்த் மறைவையொட்டி மதுரையில் அவர் படித்த பள்ளியில் திருவுருவ படத்திற்கு அஞ்சலி
தேமுதிக நிறுவனத் தலைவரான விஜயகாந்த் (வயது 71) சிகிச்சை பலனின்றி காலமானார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விஜயகாந்த் மரணத்தால் தேமுதிக தொண்டர்கள் அவரது ரசிகர்கள், திலையுலகினர் கண்ணீர் விட்டு கதறி அழுது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் மதுரையில் நடிகர் விஜயகாந்த் கல்வி கற்ற மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகில் உள்ள மதுரை கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவரான விஜயகாந்த்க்கு அப்பள்ளியில் தற்போதைய ஆசிரியர்கள் மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர். மதுரை கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் 1964ம் ஆண்டு ஆறாம் வகுப்பு பயின்ற விஜயகாந்த் படிக்கும் போது மிகச்சிறந்த கபடி வீரராக இருந்தார் எனவும், மேலும் ஒழுக்கம் மிகுந்த மாணவராகவும்,துடிப்போடும் பிறருக்கு உதவி செய்யும் குணத்தோடும் இருந்தார் எனவும் அவர் குறித்த தகவல்களை தெரிவித்தனர்.
Tags : மதுரையில் அவர் படித்த பள்ளியில் திருவுருவ படத்திற்கு அஞ்சலி