கேரளாவின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்

by Editor / 25-04-2023 01:45:04pm
கேரளாவின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்

கேரளாவின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை திருவனந்தபுரத்தில் செவ்வாய்க்கிழமை காலை 11.10 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். முதல்வர் பினராயி விஜயன், ஆளுநர் ஆரிப் முகமது கான், சசி தரூர் எம்.பி., மேயர் ஆர்யா ராஜேந்திரன் உள்ளிட்டோரை பார்க்க, நகரிலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து வரவேற்றனர். காலை 10.45 மணியளவில் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்த பிரதமர், துவக்க விழாவுக்கு முன்னதாக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலுக்குள் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

 

Tags :

Share via