உடல் எடை என்பது இன்று மிகப் பெரும் பிரச்சனையாக மாறி உள்ளது.

by Admin / 29-04-2023 08:16:42am
உடல் எடை என்பது இன்று மிகப் பெரும் பிரச்சனையாக மாறி உள்ளது.

உடல் எடை என்பது இன்று மிகப் பெரும் பிரச்சனையாக மாறி உள்ளது. இது தனி மனிதர்களை அதிகமாக பாதிப்படையச் செய்யக்கூடிய- இல்லை, மனோ நிலையை பாதிக்கக்கூடிய ஒன்றாக மாறிவிட்டது. ஓடி ஆடி வேலை செய்யாமல் காற்றாடிக்கு கீழே சுழலும் நாற்காலியில் அதிகபட்சமான நேரங்களை வேலையின் காரணமாக செலவிடுவதும் மோட்டார் சைக்கிள் ,கார் போன்ற வாகனங்களை தொடர்ந்து பயன்படுத்துவதாலும் நடைபயிற்சி என்பது வீட்டுக்குள் இருக்கின்ற பொழுது அங்குமிங்கும் செல்வதை தவிர ஒவ்வொருவருக்கும் நடை பயிற்சி என்பது இல்லாமலே போய்விட்டது. அதன் காரணமாக உடல் பெருந்து விடுகிறது. உடல் பெருத்ததின் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள் .உணவு முறையும் கூட கிட்டத்தட்ட இந்த உடல் எடையை அதிகரிக்க கூடியதாக தான் இன்றைக்கு இருக்கின்றது. அன்று நம் முன்னோர்கள் சமைத்த உணவுகளில் எல்லாவிதமான பிரச்சனைகளையும் தீர்க்கக் கூடியதாக உணவு முறை- உணவு தயாரிப்பு அமைந்திருந்தது. ஆனால் இன்றைக்கு அது போன்று நிலை இல்லாமல், பெரும்பான்மையாக ஹோட்டல்களில் வாங்கி நாக்கு சுவைக்காக சாப்பிடுகிற உணவில் அதிக அதிக கலோிகளை கொண்டு இருப்பதால், உடல் சலசலவென்று பெருத்து விடுகிறது. 20 வயதிற்குள்ளாகவே வயிறு சரிந்து தொப்பை உருவாகிவிடுகிறது .உடல் சூட்டின் காரணமாகவும் உடல் நிலையில் மாற்றம் உருவாகிவிடுகிறது. இன்றைக்கு உடல் எடையை குறைப்பதற்கு நவீனமான உடற்பயிற்சி கூடங்கள் தெருவுக்கு நான்கு என்று முளைத்து காசுகளை குவித்து கொண்டிருக்கிறது. காலை- மதியம் -மாலை -இரவு னஎ எல்லா நேரங்களிலும் நவீன உடற்பயிற்சி கூடங்களில் கிரடிட் கார்டு, டெபிட் கார்டுவழி, பணத்தை அள்ளி கொட்டி கொண்டு, உடற்பயிற்சி செய்கிறேன் என்று நேரத்தை செலவிட்டு கொண்டிருக்கிறார்கள். எந்த விதத்திலும் காசு செலவில்லாமல் உணவு முறையிலும் நடைபயிற்சியின் மூலமாகவும் நம்மளுடைய உடல் எடையை நாம் குறைக்க முடியும் .ஆனால், நாம் அது குறித்து அக்கறை உடையவர்களாக இல்லை. எல்லோரும் செய்கிறார்கள் என்பதற்காக சமூக அந்தஸ்திற்காகவும் இன்றைக்கு நவீன உடற்பயிற்சி கூடங்களில் குவிந்து கொண்டிருக்கிறார்கள் .அங்கு அவர்கள் ஒரு மெனுவை கொடுக்கிறார்கள். அதில் பட்டியலிடப்பட்டு தரப்படும் உணவுகளை உண்டால் உடல் எடையை குறைத்து விடலாம் என்று சொல்கிறார்கள். அத்துடன், ஆயுர்வேதா,சி த்தா ,அலோபதி என்று விளம்பரத்தின் மேல் விளம்பரமாக இந்த உடல் எடையை குறைப்பதற்காக எத்தனையோ விதமான மருந்துகளை -டானிக்கை கொண்டு வந்து தொலைக்காட்சியில் விளம்பரங்களில் கொட்டிக் கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு மனிதர்களுடைய உடல் சார்ந்த ஒவ்வொன்றும் காசுகளை அள்ளிக் கொடுக்கக்கூடிய ஒரு தொழிலாக மாறிவிட்டது. தலை முடி உதிர்வது ,முகத்தில் பரு வருவது, முகத்தில் பொலிவை உருவாக்குவது, கை கால் மூட்டு வலி, வாய்வு தொல்லை ,மலச்சிக்கல் இப்படி எது எதற்கெல்லாமோ இன்றைக்கு மருந்துகளை தயாரித்து விற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள். ஒன்றை, நாம் புரிந்து கொள்ள வேண்டும். எளிமையான உணவு, சாதாரணமான ஒரு நடை  எல்லா விதமான உடல் சம்பந்தப்பட்ட அத்தனை பிரச்சனைகளையும் தீர்த்துவிடும் .நம்மளுடைய முன்னோர்களில் யாரோ ஒரு சிலருக்கு மட்டும்தான் உடல் பருமனும் தொப்பையுமாக இருந்திருப்பார்கள். உடல் பருமனாக, மல்யுத்த வீரர் போன்று இருப்பவர்கள், எல்லாம் உடல் உழைப்பினால் அவர்களுடைய உடல் இறுகி பெருத்திருக்குமே, தவிர, இன்றைக்கு இருப்பது போன்றான நிலை அன்றைக்கு இல்லை. இத்தனை வயது உடையவன்- இத்தனை அடி உயரம், இத்தனை கிலோவில்தான் இருக்க வேண்டும் என்கிற ஒன்றை ஸ்கேயிலாக வைத்துக் கொண்டு, இன்றைக்கு 5 கிலோ குறைத்து விட்டோம். 10 கிலோ குறைத்து விட்டோம். 20 கிலோ குறைத்து விட்டோம் என்று ஆணையும் பெண்ணையும் விளம்பரம் மாடலாக இன்றைக்கு கொண்டுவந்து நாம் நிறுத்தி உடலை திறந்த மார்போடு இந்த பக்கம் முன்பு இந்த பக்கம் பின்பு என்று பிபோா்- ஆப்டர் என்று சொல்லக்கூடிய படங்களை போட்,டு உங்கள் உடலை நாங்கள் குறைத்து தருகிறோம் என்று கூவி -கூவிக்கொண்டு இன்றைக்குசெய்யும் வியாபாரம் கொடி கட்டி பறந்து கொண்டிருக்கிறது. ஒன்றை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். உடல் எடை என்பது ஒரு பெரும் பிரச்சனையாக இருந்து கொண்டிருக்கின்ற இந்த சூழலில், நாம் நம்முடைய உணவில் அதிகமாக காய்கறிகளையும் ஊட்டச்சத்து நிறைந்தகலோிகள் குறைவாக இருக்கின்ற பழங்களையும் கீரைகளையும் நாம் சாப்பிட்டு வந்தாலே போதும், நம்மளுடைய உடல் தானாக நமக்கு தேவையான அளவிற்கு உரிய ஆரோக்கியமான உடலாக நம்மிடம் இருக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்

 பழங்களை ஆரஞ்சு, மாதுளை, கொய்யா, ஆப்பிள் போன்ற பழங்களில் குறைந்த கலோரிகள் இருப்பதால் இவற்றை சாப்பிடுவதன் மூலமாக நாம் புரத தாதுக்கள் பெற முடியும் எடையை குறைப்பதற்கு மட்டுமில்லாத இந்த பழங்கள் ரத்தத்தை சீராக ஓட வைப்பதற்கும் நோய் போன்றவற்றை எதிர்ப்பதற்கும் உதவுகின்றன கீரைகளில் நிறைய சத்துக்கள் உள்ளன அவற்றில் கால்சியம், பொட்டாசியம் அதிகம் இருப்பதால் அது நம்மளுடைய உடலை கட்டுக்குள் வைப்பதற்கு துணை நிற்கின்றது .காய்கறிகளில் பீன்ஸ், கேரட் அதோடு பயிறு வகைகளையும் நாம் அதிகமாக உட்கொள்ள வேண்டும் .அதில் மெக்னீசியம் கார்போஹைட்ரேட்டுகள் எல்லாம் இருப்பதால் நமக்கு உடலை மெலிதாக வைத்துக் கொண்டிருப்பதற்கு துணை நிற்கும் இந்த உடலில் அதிகமாக கொழுப்பை நாம் கட்டுப்படுத்தி விட்டாலே போதும் அதற்கு நாம் வருத்த இந்த பொறித்த என்னை உணவுகளை நம் அறவே தவிர்த்து விட வேண்டும். அவிழ்த்த பொருட்களை நாம் அதிகமாக உட்கொள்ள வேண்டும். அத்துடன் மிளகு இஞ்சி சீரகம், ஏலக்காய் போன்றவர்களை எல்லாம் நம்மளுடைய உணவு முறைகளில் சேர்த்துக் கொள்ள வேண்டும் .அது நமக்கு நம்மளுடைய உடல் எடையை குறைப்பதற்கு வழிவகை செய்யும் வெந்தயம் இல்லை வெந்தயத்தை ஊற வைத்து அதனுடைய நீரை குடித்தாலே உடல் எடையை குறையும் என்று சொல்லுகிறார்கள். அதனால் என்னை கொழுப்பு அதிகம் உள்ள உணவுகளை தவிர்த்து நாம் அருந்துகின்ற காப்பி. டீ போன்றவற்றை கூட கிராமத்தில் தனியா காப்பி   தனியா தூளில் காபி தயாரித்து காப்பி போட்டு தருவார்கள் இஞ்சி டீ அதாவது சுக்கு காய்ந்த சுக்கை வைத்து சுட்டு என்று போட்டு கொடுப்பார்கள். இஞ்சி அதிகமாக போட்டுக்கொண்டு இஞ்சி டீ குடுப்பார்கள். எலுமிச்சை எஞ்சியும் எலுமிச்சையும் கலந்து கொடுக்கக்கூடிய பால் இல்லாத வரக்காப்பி என்று சொல்வார்கள். அதை நாம் வந்து அருந்தலாம். செம்பருத்தி பூவை நாம் உலர வைத்து அது தூளாக்கி அந்த தோளிலிருந்து நாம் தேநீரை உருவாக்கி அது வழியாக சாப்பிடலாம் .இல்லை என்றால், அகத்திக்கீரை போன்றவற்றை ஊற வைத்து அதில் வழியாக அந்த தண்ணீரை நாம்பருகினால் உடல் உடல் சூட்டை குறைப்பதோடு உடம்புக்கு தேவையான சத்துக்களை அந்த நீராகாரம் கொடுப்பதோடு உடலை கட்டுக்குள் வைப்பதற்கும் காரணமாக இருக்கும் அதனால் அதனால் நாம் நம்முடைய உடம்பில அதிகமாக கொழுப்பை சேர்க்காமல் இருந்தாலே நாம் உடல் எடை கூடாமல் இருப்பதற்கு நாமே காரணமாக இருப்போம் முந்திரி பருப்புகளை நெய் போட்டு வறுத்து உண்பது என்பது இன்றைக்கு உணவு பழக்கங்களில் ஒன்றாக இருக்கிறது அது நமக்கு அதிகமாக கொழுப்பை கொடுக்கக் கூடியது புரோட்டின் கொழுப்பும் அதிகமாக உடலில் சேரும் பொழுது உடல் எடை கூடாமல் என்ன செய்யும் அதனால் உடல் எடையை கூட்டாமல் இருப்பதற்கு உடம்பு சீராக இருப்பதற்கு நாம் வழிவகை செய்ய வேண்டும். வெண்ணை போன்ற உணவுகளை தவிர்த்து விட வேண்டும் பால் கட்டிகளை தடுத்து விட வேண்டும் .தயிரை சாப்பாட்டில் கலந்து சாப்பிடலாம் அது உடல் எடையை குறைப்பதற்கு காரணமாக இருக்கும். நீர்மோர் நிறைய அருந்தலாம். அது உடல் சூட்டை குறைப்பதற்கும் வயிற்றை அஜீரண கோளாறு போன்றவற்றிலிருந்து கட்டுப்படுத்துவதற்கும் காரணமாக இருக்கும். மல்லி இலையை வைத்துக் கொண்டு டீ தயாரிப்பார்கள். புதினா இலையை வைத்துக்கொண்டு டீ தயாரிப்பார்கள். இதெல்லாம் உடல் எடையை குறைப்பதோடு உடலுடைய ரத்த ஓட்டத்தையும் ஆரோக்கியத்தையும் சீராக வைத்திருப்பதற்கு உதவும் பழக்கம் என்பது மிக முக்கியமானது தினமும் சாப்பாட்டிற்கு முன்பாக எதையாவது ஒரு பழத்தை நாம் சாப்பிட்டு வந்தால் வயிறு பிரச்சனைகள் என்று ஜீரணிக்கிற சக்தி நமக்கு அதிகமாக வரும் இல்லை; தூண்டப்படும். அதனால் சர்க்கரை ஒப்பு பால் வெண்ணெய் இதுபோன்று வெள்ளையாக இருக்கக்கூடிய உணவுகளை அதிகமாக நாம் எடுத்துக் கொள்ளாமல் தேவைக்கு நாம் எடுத்துக் கொண்டாலே உடல் எடையை குறைப்பதோடு உடலுக்குள்ளே இருக்கக்கூடிய பாகங்களையும் நாம் பாதுகாப்போம். அதனால் தினமும் ஒரு 45 நிமிடமாவது நாம் நடைபயிற்சியை மேற்கொள்ள வேண்டும். புதினா ,கொத்தமல்லி தழை போன்றவற்றை வைத்துக் கொண்டு நாம் அதில் டீ போட்டு குடித்தால், அது நம்மளுடைய உடம்புக்கு குளிர்ச்சியை மட்டும் இல்லாமல் ரத்தத்தை சுத்த விரிப்பதோடு நம்மளுடைய வயிற்றுப் பகுதிக்கு ஏற்படக்கூடிய தாக்குதலை எல்லாம் தடுத்து நிறுத்தும் வயிறு சுத்தமாக இருந்து விட்டாலே எல்லாமே நமக்கு சரியாக அமைந்து விடும் அதனால் தான் நம் முன்னோர்கள் ஒரு நாளைக்கு இரண்டு முறை வயிற்றுக்குள்ளே இருக்கக்கூடிய கழிவுகளை வெளியேற்ற வேண்டும் என்றும் வாரத்தில் சனிக்கிழமையோ புதன்கிழமையோ எண்ணெய் வைத்து நீராட வேண்டும் என்றும் 15 நாளுக்கு ஒருமுறை வந்து கசாயம் வைத்து இஞ்சி போன்ற பொருட்களால் வீட்டில் தயாரிக்கப்படும் கசாயத்தை அருந்தி வயிற்றில் சுத்தப்படுத்துவது இது போன்ற செயல்களை நாம் செய்தோம் என்றால் உடல் கட்டுக்குள்ளே இருக்கும், உடல் புசுபுசு என்று உப்பி நம்மளை வயோதிகனா காட்டாது .ஆக, உணவே மருந்து என்பதற்கு ஒப்ப உணவு சார்ந்து இருக்கின்ற நடைபயிற்சியும் நமக்கு அவசியம் அதை ஒவ்வொருவரும் பின்பற்றி விட்டால் செலவே இன்றி நம்மளுடைய உடல் எடையை குறைத்து நம் உடம்பை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும்.

 

Tags :

Share via