தீப்பிடித்து எரிந்த பைக்.. பரபரப்பு வீடியோ
இந்தியாவில் கடந்த சில நாட்களாக தொழில்நுட்ப கோளாறு மற்றும் கோடை வெயில் காரணமாக கார், பைக்குகள் தீப்பிடித்து எரியும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அதன்படி, சமீபத்தில் ஆந்திர மாநிலம் அரக்கு மாவட்டத்தில் விசாகப்பட்டினத்தை சேர்ந்த பிரசாந்த் என்பவர் பல்சர் பைக்கில் அரக்கு நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் திடீரென தீ பற்றியது. இதனையடுத்து, தீ மளமளவென பரவி பைக் முற்றிலும் எரிந்தது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவித்தனர்.
Tags :