சுற்றுலாவில் சோகம் - தந்தை, மகள் பலி

by Staff / 03-05-2023 01:31:27pm
சுற்றுலாவில் சோகம் - தந்தை, மகள் பலி

சென்னை மந்தைவெளி பகுதியை சேர்ந்த ஐ.டி. ஊழியர் பாலமுரளி (வயது 43), தனது மனைவி சுந்தரலட்சுமி (41), மகள்கள் சவுமியா (13), சாய் ஸ்வேதா (3) ஆகியோருடன் ஏற்காட்டுக்கு சுற்றுலா சென்றிருந்தார். நேற்று முன்தினம் மதியம் ஏற்காட்டில் உள்ள நல்லூர் நீர்வீழ்ச்சியில் அவர்கள் ஆனந்த குளியல் போட்டபோது, சவுமியா 30 அடி பாறையில் ஏறினார். திடீரென சவுமியா சறுக்கி கீழே விழுந்தார். உடனே மகளை காப்பாற்றும் முயற்சியில் பாலமுரளி ஈடுபட்டார். இதில் 2 பேரும் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்கள். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

 

Tags :

Share via