டெல்லி மதுபான ஊழல் வழக்கில் இருவருக்கு ஜாமீன்

by Staff / 07-05-2023 11:39:17am
டெல்லி மதுபான ஊழல் வழக்கில் இருவருக்கு ஜாமீன்

டெல்லி மதுபான ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட இருவருக்கு டெல்லி ரவுஸ் அவென்யூ நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இந்த ஊழல் வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட யாருக்கும் இதுவரை ஜாமீன் வழங்கப்படவில்லை. அமலாக்கத்துறை வழக்கில் ராஜேஷ் ஜோஷி மற்றும் கவுதம் மல்ஹோத்ராவுக்கு முதல் முறையாக ஜாமீன் வழங்கப்பட்டது. ஒவ்வொருவரும் தலா இரண்டு லட்சம் ரூபாய்க்கான தனிப்பட்ட உத்தரவாதத்தை அளிக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் கெளதம் மல்ஹோத்ராவை பிப்ரவரி 7ஆம் தேதியும், ராஜேஷ் ஜோஷியை பிப்ரவரி 8ஆம் தேதியும் அமலாக்கத்துறை கைது செய்தது.

 

Tags :

Share via