1மணி நேரத்திற்கு மேலாக நீடித்த கோடை மழையினால் வெப்பத்தில் தவித்த மக்கள் மகிழ்ச்சி.

by Editor / 08-05-2023 11:15:01pm
 1மணி நேரத்திற்கு மேலாக நீடித்த கோடை மழையினால் வெப்பத்தில் தவித்த மக்கள் மகிழ்ச்சி.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் கடந்த சில தினங்களாக கடுமையான வெயிலின் தாக்கம் இருந்து வந்த நிலையில் பகலில் மட்டுமல்ல இரவிலும் வெப்பத்தின் தாக்கம் மிக அதிகமாக இருந்த காரணத்தினால் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனர். காலை முதல் மதியம் வரை வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில், மதியத்திற்கு மேல் சற்று வெப்பத்தின் தாக்கம் குறைந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.லேசான சாரலுடன் மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல கனமழை பெய்தது. இடி மின்னலுடன் மழை தொடங்கியது. சுமார் 1மணி நேரத்திற்கு மேலாக நீடித்த மழையினால் சாலையில்  மழை நீரும் கழிவு நீரோடு பல்வேறு கழிவுகள் ஆங்காங்கே சாலையில்  கிடப்பாதால்  பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு நோய் தொற்று ஏற்படும்  நிலை உள்ளது. கோவில்பட்டி பகுதியான நாலாட்டின்புதூர், சாலைப்புதூர், இனாம்மணியாச்சி, திட்டங்குளம், பாண்டவர்மங்கலம், இலுப்பையூரனி, மூப்பன்பட்டி பகுதியிலும் பலத்த மழை பெய்தது.இதனால் வெப்பத்தினால் பாதிக்கப்பட்டு வந்த பொதுமக்கள் இந்த மழையில் நிம்மதி மற்றும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

Tags :

Share via