இம்ரான்கான் கைது.. உச்சநீதிமன்றம் கருத்து
பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான்கானை நேற்று முன்தினம் இஸ்லாமாமபாத் உயர்நீதிமன்ற வளாகத்தில் வைத்து அந்த நாட்டு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், தடுக்க முயன்ற அவரது வழக்கறிஞர் காயமடைந்தார். இந்நிலையில், கல்வி நிறுவன அறக்கட்டளை மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட இம்ரான்கான் 8 நாட்கள் காவலில் வைக்கப்பட்டார். இதனையடுத்து, கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் இம்ரான் கானை ஒருமணி நேரத்தில் ஆஜர்படுத்த பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இம்ரான்கான் கைது செய்யப்பட்டது முற்றிலும் சட்டவிரோதமானது என அந்நாட்டு உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
Tags :