குளிக்க சென்ற சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி-முதல்வர் மு.க. ஸ்டாலின் நிவாரணம்.

by Editor / 13-05-2023 09:11:01pm
குளிக்க சென்ற சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி-முதல்வர் மு.க. ஸ்டாலின் நிவாரணம்.

தூத்துக்குடி மாவட்டத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின்  குடும்பத்திற்கு இரண்டு இலட்சம் ரூபாய் நிதியுதவி அறிவித்துள்ளார்.

இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட செய்திகுறிப்பில்,தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் வட்டம், புதூர் குறுவட்டம், சிவலார்பட்டி கிராமம், தெற்குத் தெருவைச் சேர்ந்த முருகேசன் என்பவரின் மகன்கள் மகேஸ்வரன் (12), அருண்குமார் (9) மற்றும்  சுதன் த/பெ. கார்த்திகேயன் (வயது 7) ஆகியோர் நேற்று மாலை சிவலார்பட்டி கண்மாயில் குளிக்கச் சென்றபோது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு  எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களின் குடும்பத்திற்கு தலா இரண்டு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார். 
 

 

Tags :

Share via