மதுபானம் வாங்கி சென்ற ஆயுதப்படை காவலர் மீது கொலை வெறி தாக்குதல். 

by Editor / 25-05-2023 08:46:27am
மதுபானம் வாங்கி சென்ற ஆயுதப்படை காவலர் மீது கொலை வெறி தாக்குதல். 

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரி மேல தெருவை சேர்ந்த மிகாவேல் (28). இவர் ஆயுதப்படை காவலராக பணிபுரிந்து வருகிறார். கடந்த சில தினங்களாக விடுப்பில் இருந்த இவர் இன்று திருச்செந்தூர் பரமன்குறிச்சி சாலையில் உள்ள அரசு மதுபான கடைக்கு மதுபானம் வாங்க சென்றுள்ளார். அப்போது மதுபானம் வாங்கிக் கொண்டிருந்த சிலரிடம் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் மிகாவேலை மதுபானம் வாங்க வந்த சிலர் கல்லால் தாக்கி அவரது வாகனத்தை சேதப்படுத்தி உள்ளனர். இனையெடுத்து மிகாவேல் சிகிச்சைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசார் மதுபான கடை உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர். போதை ஆசாமிகள் கூட்டாக சேர்ந்து போலீசாரை தாக்கிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

 

Tags :

Share via