இளைஞர் தற்கொலை முயற்சி
ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தில் சமீபத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. சிங்கனமாலா மண்டலம் தாரிமேலா கிராமத்தைச் சேர்ந்த ராஜேஸ் என்பவருக்கும், மற்றொரு தரப்பினருக்கும் இடையே சண்டை நடந்துள்ளது. அவர்கள் தாக்கியதும், ராஜேஷ் நேராக போலீசாரிடம் சென்றார். ஆனால், போலீசார் தன் மீது பலாத்கார வழக்குப்பதிவு செய்து, தன்னை துன்புறுத்தியதாகவும், கண்மூடித்தனமாக தாக்கியதாகவும் பாதிக்கப்பட்ட இளைஞர் குற்றம்சாட்டியுள்ளார். தொடர்ந்து அவர் வீடியோ எடுத்தபடி, பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Tags :