கோர விபத்து.. 2 பேர் துடிதுடித்து பலி

by Staff / 26-05-2023 05:36:10pm
கோர விபத்து.. 2 பேர் துடிதுடித்து பலி

விழுப்புரம் மாவட்டத்தில் கார் மீது அரசு பேருந்து மோதியதில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் அரசூர் அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்ற கார் மீது அரசு பேருந்து மோதி விபத்தை ஏற்படுத்தியது. இந்த கோர விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் காயமடைந்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via