நாளை மறுநாள் விண்ணைநோக்கி ஜிஎஸ்எல்வி எஃப்-12 செலுத்தப்படுகிறது.

by Editor / 27-05-2023 11:03:40am
நாளை மறுநாள் விண்ணைநோக்கி ஜிஎஸ்எல்வி எஃப்-12 செலுத்தப்படுகிறது.

இஸ்ரோ மற்றொரு ஏவுகணையை விண்ணில் செலுத்த தயாராகி வருகிறது. ஜிஎஸ்எல்வி-எஃப்12 ராக்கெட் இம்மாதம் 29ஆம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து காலை 10.42 மணிக்கு ராக்கெட் ஏவப்படுகிறது. இந்த ராக்கெட் மூலம் 2,232 கிலோ எடையுள்ள என்விஎஸ்-01 நேவிகேஷன் செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்படும். ஞாயிற்றுக்கிழமை காலை 7.12 மணிக்கு 27.30 மணி நேரத்திற்கு முன்னதாக கவுண்டவுன் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

 

Tags :

Share via