கோடைவெயிலுக்கு 4பேர் பலி.

by Editor / 27-05-2023 11:00:49am
கோடைவெயிலுக்கு 4பேர் பலி.

நாட்டில் கோடைவெயிலின்தாக்கம் அதிகரித்துள்ளது.அக்கினி நட்சத்திரம் முடிய இன்னும் 2 நாட்கள் உள்ளநிலையில் வெயில் கொடூரத்தக்கத்தால் பல மாநிலங்களில் மக்கள் பெரும் அவதியடைந்துவருகின்றனர்.தெலுங்கானாவில் வெயில் சுட்டெரிக்கிறது. நேற்று, அனைத்து மாவட்டங்களிலும் வெப்பநிலை 40 டிகிரியை தாண்டியது. அதிகபட்ச வெப்பநிலை நல்கொண்டா மாவட்டம் தாமராசர்லா மற்றும் ஜகித்யாலா மாவட்டம் ராகவ்பேட்டையில் 44.3 டிகிரியாக பதிவானது. கடும் வெயிலால் மக்கள் உயிர் இழக்கின்றனர். கோதாவரிகாவை சேர்ந்த ஏ.ஆர்.கான்ஸ்டபிள் மதுகுமார், கம்மம் மாவட்டத்தில் வேலை உறுதியளிப்பு பணியாளர் சுனிதா, ஜகித்யாவில் மல்லவ்வா, பத்ராத்திரியில் விவசாயி ஸ்ரீராமுலு ஆகியோர் நேற்று வெயில் பாதிப்பால் உயிரிழந்தனர். நாடு முழுவதும் வெப்ப நிலை படிப்படியாக குறைந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

 

Tags : 4 people died due to summer heat.

Share via