4 குழந்தைகளை கொன்று விட்டு தாய் தற்கொலை

by Staff / 04-06-2023 02:10:43pm
4 குழந்தைகளை கொன்று விட்டு தாய் தற்கொலை

ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. இரும்புத் தொட்டியில் அடைக்கப்பட்டிருந்த குழந்தைகள் மூச்சுத் திணறி இறந்தனர். அப்பெண்ணின் கணவர் சுரங்கத் தொழிலாளி என்றும், அவர் வேலைக்குச் சென்ற நேரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர். கணவன்-மனைவி இடையே அடிக்கடி ஏற்பட்ட தகராறால் குழந்தைகளை கொன்று விட்டு அப்பெண் தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via