ஆலங்குளம் இரட்டை கொலை வழக்கில் மூன்று பேர் கைது
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூரில் நேற்று இரவு வழக்கறிஞர் அசோக்குமார்,அவரது பெரியப்பா துரைராஜ் உள்ளிட்ட இரண்டு பேர் நிலப்பிரச்சனைகாரணமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் கொலை குற்றவாளியான ராணுவ வீரர் சுரேஷின் தந்தை குழந்தை பாண்டி (65), சுரேஷின் உறவினர்கள் முருகன்(39), மகாராஜன் (35) ஆகியோரை ஆலங்குளம் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தனது தாயுடன் பைக்கில் தப்பிய ராணுவவீரர் சுரேஷை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.Tags :