அனைத்து கட்சிகளும் ஆதரிக்கும் சட்டம்  பெண்களுக்கான 33% இடஒதுக்கீடு : கனிமொழி

by Editor / 24-04-2021 07:22:39pm
 அனைத்து கட்சிகளும் ஆதரிக்கும் சட்டம்  பெண்களுக்கான 33% இடஒதுக்கீடு : கனிமொழி

 

கனவு தமிழ்நாடு’ என்ற அமைப்பின் சார்பில், பொருளாதார வளர்ச்சியில், “தமிழகத்தின் ஒரு டிரில்லியன் டாலர் கனவு” என்ற தலைப்பில், சென்னையில் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் பேசிய கனிமொழி எம்.பி, ஒடுக்கப்பட்டவர்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு, உள்ள அதிகாரங்களை பறிக்கும் சூழல்தான் தற்போது உள்ளதாகவும் ஒரு கருத்திற்கு எதிர்க் கருத்தை வைக்க முடியாத சூழலில் மத்திய அரசு செயல்படுகிறது என்றும் குற்றஞ்சாட்டினார்.
மேலும், இயற்கையை மனிதர்கள் அழித்த காரணத்தால் இயற்கை மனிதர்களை அழிக்கும் சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது என்றும் அதனால்தான் கொரோனா போன்ற பெருந்தொற்று உலகையே ஆட்டி படைத்து வருகிறது என்று கூறினார்.

 

Tags :

Share via