மாதாந்திர ஓய்வூதியம் கோரும் திருநங்கைகள்
இந்த வாரம் பீகார் தலைநகரில் நடைபெறும் பிரைட் பரேடில், சமூகப் பாதுகாப்பு நடவடிக்கையாக, திருநங்கைகள் மாதாந்திர ஓய்வூதியத்திற்காகப் போராடவுள்ளனர். பீகாரைச் சேர்ந்த 'தோஸ்தானசஃபர்' என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் ஜூலை 14ஆம் தேதி நடத்தும் அணிவகுப்பில் தமிழ்நாடு, மணிப்பூர், பஞ்சாப், உத்தரபிரதேசம், டெல்லி, மும்பை மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து பங்கேற்பார்கள். 'தோஸ்தானசஃபர்' நிறுவனர் செயலாளர் ரேஷ்மா பிரசாத் ஞாயிற்றுக்கிழமை பி.டி.ஐ-யிடம் கூறுகையில், க்யூயர் சமூகத்தை கொண்டாடவும் கௌரவிக்கவும் பல மாநிலங்களில் பிரைட் பரேட் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.<br /> Tags :