பெருந்துறை அருகே ஆசிட் குடித்து பெண் தற்கொலை.
பெருந்துறையை அடுத்துள்ள துடுப்பதி, விஐபி கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் (54). இவர் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் அக்கவுண்டண்டாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி மகேஸ்வரி (44). கடந்த மூன்று ஆண்டுகளாக மன உளைச்சல் ஏற்பட்ட நிலையில் பல்வேறு இடங்களில் வைத்தியம் பார்த்துக்கொண்டு இருந்த மகேஸ்வரி, குணமாகாத நிலையில் மிகுந்த மன வருத்தத்துடன் இருந்து வந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, கணவர் வேலைக்கு சென்று விட்ட நிலையில் வீட்டில் தனியாக இருந்த அவர், டாய்லெட் சுத்தம் செய்வதற்காக வைத்திருந்த ஆசிட்டை குடித்துவிட்டு வாந்தி எடுத்துள்ளார். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர், உடனடியாக அவரது கணவருக்கு தகவல் கொடுத்துவிட்டு, உடனடியாக அவரை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக, ஈரோடு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார். இந்த சம்பவம் தொடர்பாக, பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.Tags :