மாணவியை கடத்தி பாலியல் தொல்லை. மெக்கானிக் கைது

by Staff / 13-07-2023 04:13:02pm
மாணவியை கடத்தி பாலியல் தொல்லை. மெக்கானிக் கைது கன்னியாகுமரி மாவட்டம் திக்கணங்கோடு கொல்லாய் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 28). இவர் அழகிய மண்டபத்தில் உள்ள ஒர்க்ஷாப்பில் மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார். இதற்காக தினமும் பஸ்சில் சென்று வந்தார். அந்த பஸ்சில் அவரது ஊரைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி ஒருவரும் சென்று வந்தார். அவர், பேச்சிபாறை அருகே உள்ள ஒரு பள்ளியில் படித்து வந்தார். அவருடன் பிரகாஷ் பேச்சு கொடுத்துள்ளார். அப்போது மாணவியிடம், சுற்றுலா தலங்களை சுற்றி காட்டுகிறேன் என்று அவர் கூறி உள்ளார். இதனை நம்பிய மாணவி, பிரகாசுடன் சென்றுள்ளார்.திற்பரப்பு, கன்னியாகுமரி, பத்மநாபபுரம், முட்டம் என பல்வேறு பகுதிகளுக்கு மாணவியை அழைத்துச் சென்ற பிரகாஷ், பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் பயந்து போன மாணவி கதறி அழுதுள்ளார். இதனை தொடர்ந்து பிரகாஷ், அவரை ஊருக்கு அழைத்து வந்துவிட்டார்.பின்னர் வீட்டிற்கு சென்ற மாணவி, தனது பெற்றோரிடம் நடந்த சம்பவங்களை தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் மீனாகுமாரி தலைமையிலான போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் பிரகாசை கைது செய்து சிறையில் அடைத்தனர்
 

Tags :

Share via