அமைச்சர் பொன்முடி வீட்டில் இருந்து ரூ.70 லட்சத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல்

by Staff / 17-07-2023 04:44:41pm
அமைச்சர் பொன்முடி வீட்டில் இருந்து ரூ.70 லட்சத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல்

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் காலை 7 மணி முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை ஸ்ரீநகர் காலனியில் உள்ள வீடு, மற்றும் விழுப்புரத்தில் உள்ள வீடு ஆகியவற்றில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அமைச்சர் பொன்முடியின் வீட்டில் இருந்து ரூ.70 லட்சம் கைப்பற்றப்பட்டு இருப்பதாகவும், மேலும் 10 லட்சம் மதிப்பிலான பிரிட்டன் மற்றும் அமெரிக்கா கரன்சிகளும் கைப்பற்றி இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via