செந்தில் பாலாஜி உடல்நிலையில் கவனம்.. நீதிமன்றம் உத்தரவு
அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலையை அமலாக்கத்துறையினர் கவனித்துக் கொள்ள வேண்டும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து வரும் ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை 5 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மீண்டும் 12ஆம் தேதி அவரை ஆஜர் படுத்த வேண்டும் என்று முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார். புழல் சிறையில் உள்ள செந்தில் பாலாஜி வழக்கு விசாரணைக்காக காணொளி காட்சி வாயிலாக ஆஜர் படுத்தப்படுவார்.
Tags :