மணிப்பூரை பிரதமர் கைவிட்டுவிட்டார் - ராகுல்

by Staff / 09-08-2023 01:50:04pm
மணிப்பூரை பிரதமர் கைவிட்டுவிட்டார் - ராகுல்

மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான 2வது நாள் விவாதம் இன்று நடைபெறுகிறது. அதன்படி, இன்று நண்பகல் 12 மணியளவில் தொடங்கிய மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மக்களவையில் பேசிய ராகுல் காந்தி எம்.பி, “இந்தியாவில் இருந்து மணிப்பூரையே பிரித்து விட்டீர்கள். பிரதமர் மோடி மணிப்பூரை நாட்டின் ஒரு பகுதியாக கருதாததால் தற்போது வரை அங்கு செல்லவில்லை. மணிப்பூரை பிரதமர் கைவிட்டுவிட்டார். வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூருக்கு பிரதமர் ஏன் செல்லவில்லை?" என தெரிவித்துள்ளார்.
 

 

Tags :

Share via