வெள்ளத்தில் மூழ்கி ஐந்து பேர் பலி

by Staff / 10-08-2023 12:52:01pm
வெள்ளத்தில் மூழ்கி ஐந்து பேர் பலி

இமாச்சல பிரதேச மாநிலம் சிர்மவுர் மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் கிரி நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. புதன் கிழமையன்று மலகி தாதியத் கிராமத்தில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் திடீர் வெள்ளம் புகுந்தது. இதனால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் காணாமல் போயுள்ளனர். அவர்களது உடல்கள் இடிபாடுகளுக்கு அடியில் கண்டெடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையில், ஜூன் 24 முதல் மாநிலத்தில் வெள்ளத்தால் 223 பேர் இறந்துள்ளனர் என்று வருவாய்த்துறை அமைச்சர் தெரிவித்தனர்.

 

Tags :

Share via