நீட்: உதயநிதியை உறையவைத்த மாணவர். 

by Editor / 14-08-2023 11:07:12pm
நீட்: உதயநிதியை உறையவைத்த மாணவர். 

நீட் தேர்வு 2 முறை எழுதி உயிரிழந்த மாணவனின் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்ல வந்த அமைச்சர் உதயநிதியிடம் சரமாரியாக மாணவர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இரண்டு முறை தொடர்ந்து நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் விரக்தி அடைந்த சென்னையை சேர்ந்த ஜெகதீஷ் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இவரது இறப்பை தொடர்ந்து ஜெகதீஷின் தந்தையும் மறுநாளே தற்கொலை செய்து கொண்டார்.இந்நிலையில் அமைச்சர் உதயநிதி ஜெகதீஷின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் சொல்வதற்கு வந்திருந்த போது ஜெகதீஷின் நண்பர் பயாஸ்தீன் கேள்வி எழுப்பினார்.இந்த வீடியோக்காட்சிகள் சமுகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

 

Tags :

Share via