செளராஷ்ட்ரா  ஶ்ரீவரதராஜா பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

by Admin / 18-08-2023 12:49:46am
செளராஷ்ட்ரா  ஶ்ரீவரதராஜா பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

திண்டுக்கல் பாரதிபுரத்தில் உள்ள செளராஷ்ட்ரா  ஶ்ரீவரதராஜா பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

திண்டுக்கல் பாரதிபுரத்தில் உள்ள செளராஷ்ட்ரா ஶ்ரீவரதராஜா உயர்நிலைப்பள்ளியில் 1983-ம் ஆண்டு முதல் 1991-ம் ஆண்டு வரை படித்த  முன்னாள் மாணவ, மாணவிகள் 40 ஆண்டுகளுக்கு பிறகு சந்திக்கும் நிகழ்ச்சி திண்டுக்கல்  பாரதிபுரத்தில் உள்ள செளராஷ்ட்ரா ஶ்ரீவரதராஜா உயர்நிலைப்பள்ளியின் உள்வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைபாளராக தினகரன், பாபுலால் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. மேலும் முன்னாள் மாணவர் தேவேந்திரன் கூறுகையில், 

சுமார் 40 ஆண்டுக்களுக்கு பின்னர் நண்பர்கள்  ஒருவரை ஒருவர் சந்தித்து கொண்ட நிகழ்ச்சி மிகவும் மகிழ்ச்சியாகவும், நெகிழ்ச்சியாகவும்  பள்ளி காலங்களில் மலரும் நினைவுகளை ஏற்படுத்தக்கூடியதாகவும்  இருந்தது . மேலும் கஷ்டப்படும் நண்பர்களுக்கு உதவி செய்வதென்று முடிவு செய்யப்பட்டது . இந்நிகழ்ச்சிக்குகான ஏற்பாடுகளை  வசந்தன், பாஸ்கர், சங்கர்லால், காளிமுத்து, பாலாஜி, கண்ணன், கணேஷ், செந்தில்குமார் ஆகியோர்  சிறப்பாக செய்து இருந்தனர்.

இந்த சந்திப்பின் போது கல்லூரி மாணவர்கள் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இருந்தும் வந்து கலந்து கொண்டனர். இதில் முன்னாள் மாணவர்கள் 105 பேர், மாணவிகள் 45 பேர் மொத்தம் 150-பேர் கலந்து கொண்டனர். இதில் முன்னாள் ஆசிரியர், ஆசிரியைகள் பலர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

 

செளராஷ்ட்ரா  ஶ்ரீவரதராஜா பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
 

Tags :

Share via