தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி - முன்னாள் அமைச்சர் பேச்சு

by Staff / 19-08-2023 04:18:02pm
தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி - முன்னாள் அமைச்சர் பேச்சு

தமிழகத்தில் மீண்டும் அதிமுகவின் பொற்கால ஆட்சி அமைய உள்ளது என்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய அவர், 'இன்று நடக்கின்ற ஆட்சியின் அவல நிலை பற்றி தெரியும். விடியா திமுக ஆட்சியின் அவலத்தை மக்கள் உணர்ந்து விட்டார்கள். விடிகின்ற பொழுது அண்ணா திமுகவின் ஆட்சி இருக்கும். எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழகத்தில் பொற்கால ஆட்சி மீண்டும் வர இருக்கிறது. அண்ணா திமுக தொண்டர்கள் மகிழ்ச்சியோடு இருக்க வேண்டும்' என்றார்.

 

Tags :

Share via