நண்பர்களால் வாலிபர் தற்கொலை
மாதவரம், உடையார் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் குகன், 28; பொறியியல் பட்டதாரி. தனியார் நிறுவன ஊழியர்.இவரது மனைவி சாந்தி. இந்த தம்பதிக்கு ஐந்து வயதில் ஆண் குழந்தையும், மூன்று வயதில் பெண் குழந்தையும் உள்ளது. கால்பந்து போட்டியில் ஆர்வமுள்ள குகன், 'தன் நண்பர்களுக்கு விளையாட்டு திறமைகள் இருந்தும், அவர்களுக்குள் ஒற்றுமை இல்லையே' என, கடந்த சில மாதங்களாக வருத்தத்துடன் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த வாரம் நண்பர்களிடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் மன விரக்தியடைந்தவர், நேற்று காலை வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவல் அறிந்த மாதவரம் போலீசார், குகனின் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரிக்கின்றனர்.
Tags :