கடவுளுக்கு படைக்கப்படும் பிரசாதம் கெட்டுப்போன அரிசியில் உருவாக்கியதா..?

by Editor / 21-08-2023 09:56:59pm
கடவுளுக்கு படைக்கப்படும் பிரசாதம் கெட்டுப்போன அரிசியில் உருவாக்கியதா..?

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் புகழ்பெற்ற அருள்மிகு குற்றாலநாதர் ஆலயம் அமைந்துள்ளது  இங்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து குற்றால அருவி நீராட வரும் சுற்றுலாப் பயணிகள் குற்றாலநாதரை தரிசிக்காமல் செல்வதில்லை இதேபோன்று சபரிமலைக்கு மாலை அணிவித்து சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களும் குற்றாலம் பேரருவியில் வந்து குளித்துவிட்டு குற்றாலநாதரை தரிசித்து விட்டு செல்வது வழக்கமாக இருந்து வருகிறது. மேலும் தென்காசி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் குற்றாலநாதர் ஆலயத்திற்கு திருவிழா காலங்களில் வந்து செல்வதும் சாதாரண நாட்களில் வந்து செல்வம் வழக்கமாக இருந்து வருகிறது. பல்வேறு சிறப்புகளை பெற்ற குற்றாலநாதன் ஆலயத்தில் இறைவனுக்கு படைக்கப்படும் உணவும் பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதமும் தரமற்றதாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து வந்த நிலையில் இன்று தென்காசி வட்டார உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் நாக சுப்பிரமணியன் குற்றாலம் குற்றாலநாதர் ஆலயத்தினுடைய உணவு மற்றும் பிரசாதம் தயாரிக்கும் அறையில் திடீர் ஆய்வுகளையும் மேற்கொண்டார். அப்பொழுது அங்கு கெட்டுப்போன சுமார் 850 கிலோ பச்சரிசி பலமுறை பயன்படுத்தப்பட்டு கெட்டுப் போன நிலையில் இருந்து தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் 48 லிட்டர் எண்ணெய் மற்றும் 15 கிலோ பச்சரிசி மாவு 2 .1/2 கிலோ வெல்லம் உள்ள உள்ளிட்ட பல்வேறு பிரசாதம் தயாரிக்கும்  பொருட்களை பறிமுதல்  செய்தார். தரமற்ற நிலையில் இருந்த அனைத்து பொருட்களையும் பறிமுதல் செய்து அவர் இது குறித்து சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தார். குற்றாலம் வட்டார பகுதிகளில் உள்ள உணவகங்களில் தான் தரமற்ற உணவுகள் என்ற நிலை இருந்து வந்த நிலையில் தற்போது குற்றாலம் குற்றாலநாதர் ஆலயத்திலும் ஆண்டவனுக்கு படைக்கப்படும் பிரசாதம் முதல் பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதமும் தரமில்லாமல் மற்றவைகளாக இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்து அதிகாரி இது குறித்து மேல் அதிகாரிகளுக்கு நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்துள்ளார் .இந்த சம்பவம் பக்தர்கள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

Tags :

Share via