100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் முறையாக வேலை வழங்கக்கோரி தர்ணா போராட்டம்

by Admin / 22-08-2023 03:03:12pm
100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் முறையாக வேலை வழங்கக்கோரி தர்ணா போராட்டம்

100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் முறையாக வேலை வழங்கக்கோரி 100க்கும் மேற்பட்ட பெண்கள் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இலுப்பையூரணி ஊராட்சிக்கு உட்பட்ட இலுப்பையூரணி, மறவர் காலனி, சிந்தாமணி நகர்,லாயல் மில் காலனி, சண்முகநகர், தங்கப்பன் நகர், ஆசிரியர் காலனி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பெண்கள்  ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு திரண்டனர்.

அவர்கள், மகாத்மா காந்தி வேலை உறுதித் திட்டத்தில் 100 நாட்கள் முழுமையாக வேலை வழங்க வேண்டும் என்று பெண்கள் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டம் நடத்தினர்.

பின்னர் தங்களது கோரிக்கை மனுவினை ஊரக வளர்ச்சி அலுவலரிடம் வழங்கும் போது ஊரக வளர்ச்சி அலுவலர் மனுக்களை வாங்க மறுத்ததால் பெண்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தொடர்ந்து மனுவை பெற்றுக் கொண்ட அவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் அவர்கள் அங்கிருந்து கலந்து சென்றனர்.

 

100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் முறையாக வேலை வழங்கக்கோரி தர்ணா போராட்டம்
 

Tags :

Share via