பட்டா மாற்றம் செய்து தர ரூபாய் 20 ஆயிரம் லஞ்சம் ஏலக்குறிச்சி வருவாய் ஆய்வாளர் கைது

by Editor / 13-08-2022 01:11:25pm
பட்டா மாற்றம் செய்து தர ரூபாய் 20 ஆயிரம் லஞ்சம் ஏலக்குறிச்சி வருவாய் ஆய்வாளர் கைது

அரியலூர் மாவட்டத்தில் பட்டா மாற்றம் செய்து தருவதாக 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் கைது செய்யப்பட்டர்.  ஏலக்குறிச்சி வருவாய் ஆய்வாளர செந்தில்குமார் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் சங்கரநாராயணன் கட்டளை கிராமத்தைச் சேர்ந்த சச்சிதானந்தம் என்பவரிடம் பட்டா மாற்றம் செய்வதற்காக ஏற்கனவே பத்தாயிரம் ரூபாய் லஞ்சமாக பெற்றுள்ளார். இந்த நிலையில் நேற்று மேலும் 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் செந்தில்குமாரை கையும் களவுமாக பிடித்தனர். மேலும் கிராம நிர்வாக அலுவலர் கோவிந்தராஜ் இடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via