எடப்பாடி பழனிசாமி பரபரப்பு அறிக்கை

by Staff / 23-08-2023 02:51:51pm
எடப்பாடி பழனிசாமி பரபரப்பு அறிக்கை

 அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். வேதாரண்யம் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் மீண்டும் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினராலும், இலங்கை கடற்கொள்ளையராலும் தாக்கப்படுவது தொடர்கதையாக உள்ளது என்றும்.  நாகப்பட்டின மீனவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து மீனவர்கள் இன்று வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர். தமிழக முதலமைச்சர் மீனவர்களை பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல், எப்போதும் போல மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் ஒன்றை எழுதி முடித்திருக்கிறார் என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via