பாஜகவின் ரூ3.5 கோடி ஹவாலா பணம் கொள்ளை- 625 பக்க குற்றப்பத்திரிகை

by Editor / 24-07-2021 10:02:14am
பாஜகவின் ரூ3.5 கோடி ஹவாலா பணம் கொள்ளை- 625 பக்க குற்றப்பத்திரிகை

கேரளா சட்டசபை தேர்தலின் போது நிலப் பதிவுக்காக கொண்டு செல்லப்பட்ட ரூ25 லட்சம் திருச்சூர்-கொடக்கர நெடுஞ்சாலையில் கொள்ளையடிக்கப்பட்டதாக முதலில் ஒரு புகார் போலீசில் தரப்பட்டது. பின்னர் கோழிக்கோடு நகரில் இருந்து கொச்சி செல்லும் வழியில் மேலும் கொடக்கர மேம்பாலத்தில் ரூ25 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டதாக மற்றொரு புகார் போலீசில் தரப்பட்டது.

இந்த புகார்களை கொடுத்தவர்களின் பின்னனியை ஆராய்ந்த போலீசார் பாஜகவினர் தொடர்பு இருப்பதாக கண்டுபிடித்தனர். அடுத்தடுத்து கொடக்கர பகுதியை மையமாக வைத்து பணம் பறிப்பு புகார்கள் வந்தது குறித்து சந்தேகம் எழ தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையில் தான் கர்நாடகா மாநிலத்தில் இருந்து கேரளாவுக்கு பாஜகவினர் தேர்தல் செலவுக்காக கொண்டு வந்த மொத்தம் ரூ3.5 கோடி பணம் கொடக்கர நெடுஞ்சாலையில் கொள்ளையடிக்கப்பட்டது 

 

Tags :

Share via