ஆர். பி. உதயகுமார் பேட்டி

by Staff / 25-08-2023 04:56:26pm
ஆர். பி. உதயகுமார் பேட்டி

மதுரை மாட்டுத்தாவணி உள்ள செய்தியாளர் அரங்கத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  இதில் நலத்திட்ட உதவிகளை சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர். பி. உதயகுமார் வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது: தமிழக சட்டசபையில் உள்துறைக்கான மானிய கோரிக்கையில், கொடநாடு கொலை வழக்கு குறித்து சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடியார் தெளிவான விளக்கத்தை கூறியுள்ளார் அந்த குறிப்பு எல்லாம் சட்டமன்றத்தில் உள்ளது.  அதில் கொடநாடு கொலை வழக்கு குற்றவாளிகளை சிறையில் அடைத்தது அதிமுக அரசு. ஆனால் அவர்களுக்கு ஜாமீன் வழங்கியது திமுக அரசு. குற்றச்சாட்டப்பட்ட குற்றவாளியுடன் திமுக முதலமைச்சர் அருகில் நின்று புகைப்படம் எடுத்திருக்கிறார். தொடர்ந்து கடத்தல், கொலை, கொள்ளை, திருட்டு வழிப்பறி கொடும் குற்றம் புரிந்தவர்களுக்கு  திமுகவைச் சேர்ந்தவர்கள் எப்படி ஜாமீன்தார்களாக இருந்தார்கள். ஏற்கனவே உச்ச நீதிமன்றம் ஒரு சிறப்பான தீர்ப்பை எடப்பாடியாருக்கு  வழங்கியுள்ளது. பிறகு இடையூறு ஏற்படுத்தும் வண்ணம் தொடுத்த வழக்கில், இன்றைக்கு நீதிமன்றம் சரியான சம்பட்டி அடியான தீர்ப்பை வழங்கி உள்ளது. நிச்சயம் எடப்பாடியார் கோட்டைக்குப் போவார், அதிமுகவிற்கு எதிராக சென்றவர்கள் அரசியல் அனாதையாக தான் உள்ளார்கள் என்பதை வரலாற்றை பார்த்தாவது திருத்திக் கொள்ள வேண்டும் எனக் கூறினார்.

 

Tags :

Share via