பஸ் மோதி தலை நசுங்கி வாலிபர் பலி

by Staff / 28-08-2023 03:35:47pm
பஸ் மோதி தலை நசுங்கி வாலிபர் பலி

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா, கபிஸ்தலம் அருகே உள்ள மேல மேட்டு தெருவில் வசிப்பவர்  ஜெயராமன் மகன் விக்னேஷ் (27). இவர் கும்பகோணத்தில் அமைந்துள்ள எலக்ட்ரிக்கல் கடையில் வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி ஒரு வருடமான நிலையில், மனைவி  5 மாத கர்ப்பிணியாக  உள்ளார். இவர்  வழக்கம்போல்  வேலைக்காக புறப்பட்டு, இரண்டு சக்கர வாகனத்தில் கும்பகோணம் நோக்கி சென்று கொண்டு இருந்தார்.  அப்போது திங்களூர் கோயிலுக்கு சென்று விட்டு திருநாகேஸ்வரம் சென்று கொண்டிருந்த சுற்றுலா பேருந்து அதிவேகமாக வந்து மோட்டார் சைக்கிளில் சென்ற விக்னேஷ் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கபிஸ்தலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுற்றுலா பேருந்து மோதி விபத்தில் பலியான வாலிபர் விக்னேஷின் உடலை கைப்பற்றி பிரேத  பரிசோதனைக்கு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சுற்றுலா பேருந்து ஓட்டுனர் திருவாரூர் மாவட்டம் சோத்தமங்கலம் கிராமத்தை சேர்ந்த சிவக்குமார் (26) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via