திருச்செந்தூர் திருக்கோவிலில் ஆவணித்திருவிழா நாளை கொடியேற்றத்துடன் துவங்குகிறது.   

by Editor / 03-09-2023 08:58:41am
 திருச்செந்தூர் திருக்கோவிலில் ஆவணித்திருவிழா நாளை கொடியேற்றத்துடன் துவங்குகிறது.   

 உலகப் புகழ் பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் ஆண்டுதோறும் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான ஆவணி  திருவிழா நாளை காலை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. கொடியெற்றத்தை முன்னிட்டு நாளை அதிகாலை ஒரு மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு 01-30  மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும் , 2.00 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெறுகிறது. அதனைத்தொடர்ந்து  கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு காலை 5 மணி முதல் ஐந்து முப்பது மணிக்குள் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

 12 நாட்கள் நடைபெறக்கூடிய இந்த திருவிழாவில் நாள்தோறும் சுவாமியும் அம்பாலும் ஒவ்வொரு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெறுகிறது முக்கிய நிகழ்ச்சியான சிவப்பு சாத்தி பத்தாம் தேதியும், பச்சை சாத்தி பதினொன்றாம் தேதியும் நடைபெறுகிறது, சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 13 -ம் தேதி  நடைபெறுகிறது. விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் ஆலய நிர்வாகம் சார்பில் சிறப்பாக செய்யப்பட்டுவருகிறது.

 

Tags :  திருச்செந்தூர் திருக்கோவிலில் ஆவணித்திருவிழா நாளை கொடியேற்றத்துடன் துவங்குகிறது.   

Share via