தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

by Staff / 03-09-2023 01:38:33pm
தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

கரூர் சக்தி நகரை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 43). தொழிலாளியான இவர், தனது தாயிடம் மது குடிப்பதற்காக பணம் கேட்டுள்ளார். அதற்கு அவர் பணம் கொடுக்கவில்லையாம். இதனால் மனமுடைந்து காணப்பட்ட செந்தில்குமார் சம்பவத்தன்று தனது வீட்டில் தூக்கில் தொங்கினார். இதைக்கண்ட உறவினர்கள் செந்தில்குமாரை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு செந்தில்குமாரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த தற்கொலை குறித்து தாந்தோணிமலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

 

Tags :

Share via