மகனின் பிறந்தநாள் கேக் வெட்டும்போது தந்தை மரணம்

by Staff / 07-09-2023 03:56:12pm
மகனின் பிறந்தநாள் கேக் வெட்டும்போது தந்தை மரணம்

உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் மனதை உலுக்கும் சம்பவம் நடந்துள்ளது. சுஷில் சர்மா (45) என்பவர் தனது மனைவி கிரண், குழந்தைகள் சாக்ஷி, சர்தக் மற்றும் மன்னாத் ஆகியோருடன் வசித்து வந்தார். சமீபத்தில், சுனில் ஷர்மா தனது மகன் சர்தக்கின் பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டிக் கொண்டிருந்தபோது, ​​அவர் திடீரென சுருண்டு விழுந்தார். உடனடியாக அவரது குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், மாரடைப்பால் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர். இதனைக் கேட்டு குடும்பத்தினர் கதறி அழுத சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via