திருப்பூரில் அதிகரிக்கும் கள்ளக்காதல் கொலைகள்-கேள்விக்குறியாகும் குழந்தைகளின் எதிர்காலம்

by Admin / 25-07-2021 03:17:29pm
திருப்பூரில் அதிகரிக்கும் கள்ளக்காதல் கொலைகள்-கேள்விக்குறியாகும் குழந்தைகளின் எதிர்காலம்



திருப்பூரை அடுத்த தாராபுரம், குண்டடம் காதபுள்ளபட்டியில் உள்ள ஒரு தோட்டத்தில் ரமேஷ், அவரது மனைவி சித்ரா வேலை செய்து வந்தனர். அதே தோட்டத்தில் வேலை செய்த மணிகண்டன் என்பவருடன் சித்ராவுக்கு கள்ளத் தொடர்பு இருந்தது. உறவினர், 17 வயது சிறுவனுடனும் தவறான பழக்கம் இருந்து வந்தது.

இந்தநிலையில் கடந்த 6 மாதம் முன்பு ஏற்பட்ட தகராறில் 3 பேரும் சேர்ந்து, மணிகண்டனை அடித்து கொன்று குழி தோண்டி புதைத்தனர். சமீபத்தில் இந்த கொலை தெரிய வர 3பேரையும் போலீசார் கைது செய்தனர்.
 
இதேபோல, திருப்பூர் மாநகரில் தாயுடன் தொடர்பில் இருந்த வாலிபரை மகன் தனது நண்பருடன் சேர்ந்து அடித்து கொன்றார். உடலை மறைக்க பாறைக்குழிக்குள் போட்டு பெட்ரோல் ஊற்றி எரித்தார். இதுதொடர்பாக மகன், தாய், நண்பர் என 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இதுபோல் அடிக்கடி திருப்பூர் மாவட்டத்தில் கள்ளக்காதல் பிரச்சினையில் கொலைகள் நடந்து வருகிறது. இந்த சம்பவங்களில் பெற்றோரின் தவறான நடத்தையால் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். அவர்களின் எதிர்காலம் என்பது பெரிய கேள்விகுறியாக மாறி உள்ளது.

இதுகுறித்து போலீசார் கூறுகையில்:

‘கள்ளக்காதல் விவகாரத்தில் நடைபெறும் திட்டமிட்ட கொலைகளுக்கு சட்ட ரீதியாக வழங்கப்படும் தண்டனைகள் பலருக்கும் தெரிவதில்லை. இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டு அல்லது ஆயுள் தண்டனை நிச்சயமாக கிடைக்கும்.

போலீசின் இன்றைய நவீன யுத்திகள் மூலம் கொலையாளிகள் உடனடியாக கைது செய்யப்படுகின்றனர். எனவே குடும்ப உறவுகளை சிதைக்கும் இதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என்றனர்.

 

 

Tags :

Share via