குடிநீர்த்தட்டுப்பாடு மழைநீரை பிடிக்க மரத்தில் தொங்கவிடப்பட்ட காலிக்குடங்கள்...?
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே ஆணையபுரத்தில் குடிதண்ணீர் பற்றாக்குறையினால் மக்கள் தினமும் பல்வேறு இன்னல்களை சந்தித்துவருகின்றனர்.உள்ளாட்சி நிர்வாகமோ நிலத்தடி நீர்மட்டம் காரணமாக மக்களுக்கு தேவையான அளவு குடிநீரை வழங்கிட முடியாமல் திணறிவருவதாக கூறப்படுகிறது.இதன் தொடர்ச்சியாக பொதுமக்கள் தங்களது கண்டனத்தை வெளிப்படுத்தும் வண்ணம் கிராம மக்கள் மழைவந்தால் மழைநீரையாவது குடிநீராக பிடித்துக்கொள்வோம் என மரத்தில் காலி குடங்களை கட்டி வைத்து விநோத போராட்டம் நடத்தினர்.
Tags : குடிநீர்த்தட்டுப்பாடு