இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் உதயநிதி மரியாதை

by Staff / 11-09-2023 11:20:23am
இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் உதயநிதி மரியாதை

தியாகி இமானுவேல் சேகரனின் நினைவு நாளில் பரமக்குடியில் உள்ள நினைவிடத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பெரியகருப்பன், பி.மூர்த்தி, கயல்விழி செல்வராஜ், ராஜகண்ணப்பன், தங்கம் தென்னரசு ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இது குறித்து ட்வீட் செய்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒடுக்கப்பட்டோரின் விடுதலைக்காகப் போராடிய தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவு நாளில், அவரது போராட்ட வாழ்வையும் சமூகப் பங்களிப்பையும் நினைவு கூர்ந்து போற்றுகிறேன். பொதுமக்கள் மற்றும் தியாகி இமானுவேல் சேகரனாரின் வழித்தோன்றல்களின் கோரிக்கையின்படி, அவரது நூற்றாண்டையொட்டி, இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் சுமார் ரூ.3 கோடி மதிப்பீட்டில் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via