ரூ.25 கோடி சொத்துக்கள் அபகரிப்பு: நடிகை கௌதமி புகார்

by Staff / 12-09-2023 11:45:14am
ரூ.25 கோடி சொத்துக்கள் அபகரிப்பு: நடிகை கௌதமி புகார்

பிரபல நடிகை கௌதமி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் அழகப்பன் என்பவரும், அவரது குடும்பத்தினரும் தனது சொத்துக்களை மோசடி செய்து அபகரித்து உள்ளனர். தனது அசையா சொத்துக்களை பராமரிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 2004ஆம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நான் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள சொத்துக்களை விற்க முடிவு செய்தேன். இந்நிலையில் அழகப்பன் தனக்கு சொத்துக்களை வாங்கவும் விற்கவும் உதவியாக இருந்தார். தன்னுடைய சூழ்நிலையை பயன்படுத்தி நாடகமாடி சொத்துக்களின் பவர் ஏஜெண்டாக மாறியதோடு, வெற்று பத்திரங்களில் கையெழுத்து வாங்கி கொண்டதாக தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via