டெங்கு கொசுக்களை ஒழிக்கும் பணி தீவிரம் - ராதாகிருஷ்ணன்

by Staff / 14-09-2023 12:06:34pm
டெங்கு கொசுக்களை ஒழிக்கும் பணி தீவிரம் - ராதாகிருஷ்ணன்

புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி காயத்ரி (19) டெங்கு காய்ச்சல் பாதிப்பால் தனியார் மருத்துவமனையில் நேற்று உயிரிழந்துள்ளார். இந்நிலையில், டெங்கு கொசுக்களை ஒழிக்கும் பணியில் 3,000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார். மேலும், இது குறித்து பேசிய அவர், “கட்டுமானப் பணிகளில் தேங்கும் நல்ல தண்ணீரில் டெங்கு கொசுக்கள் பெருகுகின்றன. கட்டுமான நிறுவனங்கள், வியாபாரிகளிடம் ஆலோசனை செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. காய்ச்சல் வந்தால் பொதுமக்கள் வீட்டிலேயே இல்லாமல் முறையான சிகிச்சை பெற வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via