வழக்கு மூலம் எனக்கு வன்கொடுமை - சீமான்

by Staff / 18-09-2023 02:34:39pm
வழக்கு மூலம் எனக்கு வன்கொடுமை - சீமான்

13 ஆண்டுகளாக வழக்கு மூலம் எனக்கு வன்கொடுமை நடந்துள்ளது என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இன்று சென்னையில், செய்தியாளர்களை சந்தித்த அவர், “13 ஆண்டுகளாக நடந்துவரும் வழக்கால் எனக்குதான் வன்கொடுமை நடந்துள்ளது. புகாரளித்த இரு பெண்களால் நான்தான் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளேன். விஜயலட்சுமிக்கு 8 முறை கருக்கலைப்பு செய்தேன் என்பது மிகப்பெரும் நகைச்சுவை. வழக்கறிஞர் என்ற முறையில் என் மனைவி என்னுடன் காவல்நிலையத்திற்கு வந்துள்ளார். என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி செய்த வீரலட்சுமி என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via