சென்னை கடற்கரை-தாம்பரம்-புறநகர் மின்சார ரயில் சேவை இன்று தற்காலிக நிறுத்தம்.
சென்னை கடற்கரை - தாம்பரம் இடையேயான புறநகர் ரயில் சேவை இன்று (அக்.02) காலை 11.00 முதல் பிற்பகல் 3.15 வரை இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தாம்பரம் மற்றும் கோடம்பாக்கம் ரயில் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இந்த ரயில் சேவை நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், செங்கல்பட்டு-சென்னை கடற்கரை இடையே புறப்படும் ரயில்கள் காலை 10.55 முதல் மதியம் 1 மணி வரை செயல்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றும் சில மணி நேரம் ரயில் சேவை நிறுத்தப்பட்டதால், பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.
Tags : சென்னை கடற்கரை-தாம்பரம்-புறநகர் மின்சார ரயில் சேவை இன்று தற்காலிக நிறுத்தம்.