கிரானைட் முறைகேடு வழக்கில் துரை தயாநிதி அழகிரி நேரில் ஆஜர்
மதுரை மாவட்டம் மேலூர் கீழவளவு பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக கிரானைட் கற்களை வெட்டி எடுத்ததில் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியாக முன்னாள் மத்திய அமைச்சர் மு. க. அழகிரியின் மகனான துரைதயாநிதி அழகிரி உள்ளிட்ட பலர் மீது கீழவளவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.இந்நிலையில் குற்றம்சாட்டப்பட்ட துரை தயாநிதி உள்ளிட்ட 15 பேர் மீது காவல்துறையினர்5191 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையினை தாக்கல் செய்தனர்.இந்த வழக்கு தொடர்பாக மேலூர் நீதிமன்றத்தில் இருந்து மதுரை மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட நிலையில் இன்று கிரானைட் முறைகேடு வழக்கு தொடர்பாக மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் துரை தயாநிதி அழகிரி நேரில் ஆஜரானார்.
Tags :