மனைவி வெட்டிக்கொலை - கணவர் கைது
ஒரத்தநாடு அருகே பின்னையூர் மேலத் தெருவை சேர்ந்தவர் பழனிவேல் (47). இவர் மனைவி அமிர்தவல்லி. இவர்களுக்கு பார்கவி, ஸ்ரீமதி என்ற இரண்டு மகளும், வெற்றிவேல் என்ற ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் பழனி வேல் குடிபோதையில் மனைவி அமிர்தவள்ளியை மண் வெட்டியால் வெட்டி கொலை செய்துவிட்டு தலை மறைவாகிவிட்டார். ஒரத்தநாடு இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் சம்பவத்திற்கு விரைந்து சென்று பிரேதத்தை கைப்பற்றி ஒரத்தநாடு அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, மனைவியை மண்வெட்டியால் வெட்டிக் கொன்ற கணவன் பழனிவேலை கைது செய்தனர்.
Tags :