சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்களிடையே மோதல்

by Staff / 12-10-2023 01:20:38pm
சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்களிடையே மோதல்

சென்னைவள்ளலார் நகரிலிருந்து -திருவேற்காடு செல்லும் பேருந்து அரும்பாக்கம் என்.எஸ்.கே .நகர் பேருந்து நிறுத்தத்தில் மதியம்   நின்ற போது, பேருந்தில் இருந்த  பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு  மோதலாக மாறியது. ஒரு தரப்பினர் மீது மற்றொரு தரப்பினர் தாக்கிக்கொண்டனர். 

இதைக் கண்டு பேருந்தில் இருந்த பயணிகளும், சாலையோரம் சென்ற பொதுமக்களும் அதிர்ச்சியடைந்தனர். இதனால், அந்த பகுதியே பரபரப்பானது.

.இது குறித்து  காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல்கொடுக்கப் ப ட.,  அரும்பாக்கம் காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

. போலீஸை கண்டதும்  மாணவர்கள் சிதறி ஓடினர்.,மோதலில் ஈடுபட்ட 17 மாணவர்களை விரட்டிப் பிடித்து போலீஸார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த மோதலில் மாணவர் ஒருவர் காயம் அடைந்துள்ளாா்..

 

Tags :

Share via